காய்ச்சல் - பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய முஹம்மது நபி!

காய்ச்சல் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகின்றது என்று ஒரு மனிதனுக்குத் தெரியாமல் இருப்பதில் தவறில்லை, ஆனால் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நம்பிக்கையில் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பொய் சொல்லி ஏமாற்றுவது இருக்கின்றதே, அது மகா தவறு ஆகும். ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَطْفِئُوهَا بِالْمَاءِ ‏"‏‏.‏ 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்"
(ஸஹீஹுல் புகாரி : 5723)

காய்ச்சல் என்பது தனியான ஒரு நோயா அல்லது உடலில் ஏற்படும் நுண்ணுயிரித் தொற்றுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்புக் கட்டமைப்பு வீரியத்துடன் செயலாற்றும் பொழுது ஏற்படும் விளைவா, நோயறிகுறியா என்பதெல்லாம் இன்று ஒரு பாடசாலை மாணவனுக்கே சாதாரணமாகத் தெரிந்த விடயங்கள். அப்படி இருக்கும் பொழுது, எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வின் தூதர் என்று தன்னை சுய பிரகடனம் செய்து கொண்ட ஒருவர் காய்ச்சல் என்பது 'நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகின்றது' என்று எவ்வித கூச்சமும் இல்லாமல் பொய்யைச் சொல்வதை அவரை இறைதூதர் என்று நம்பும் கல்வியறிவுள்ள, நேர்மையான முஸ்லிம்கள் எப்படிப் பார்க்கப் போகின்றார்கள்?

'வெப்பகாலம், குளிர்காலம் ஏற்படக் காரணம் நரகம் வருடத்திற்கு இரண்டு தடவைகள் மூச்சு விடுவதுதான்' என்று சொல்லி முஹம்மது நபி அவர்கள் ஏமாற்று விளக்கம் வழங்கி அன்றைய மக்களை அறிவிலிகள் ஆக்கிய விடயம் குறித்து ஏற்கனவே ஒரு ஆக்கம் எழுதி இருக்கின்றேன். http://www.allahvin.com/2022/07/seasons.html


நேர்மையாக சிந்திக்கும் முஸ்லிம்களே, இவற்றையெல்லாம் நீங்கள் நம்புகின்றீர்களா? இப்படியெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத, அறிவியலுக்கு முரணான பொய்களைச் சொல்லி இருக்கக் கூடியவர் இறைதூதர் என்று இன்னுமும் நம்புகின்றீர்களா? தயவு செய்து சுயமாக சிந்தியுங்கள். குர்ஆன், ஹதீஸ்கள் ஆகியவற்றை சுய சிந்தனையுடன் படியுங்கள், இது போன்ற ஆயிரக்கணக்கான அபத்தங்களை நீங்களே கண்டு கொள்வீர்கள்.


இஸ்லாத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று முயல்பவர்கள் இதற்கு என்ன விதமாக முக்குக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

குறிப்பு : முஸ்லிம் மருத்துவர்கள் இது குறித்து என்ன சொல்கின்றார்கள் என்று அறிய ஆவல். -றிஷ்வின் இஸ்மத் 25.07.2022