விவாதம் : “முஹம்மது” என்றதும் சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் குர்ஆனின் கழுதைகள்!

ஓலமிடும் காலி டப்பாக்களும், பணமில்லாத ஓட்டை வாளிகளும்.
'முஹம்மது' விவாத சவாலில் மூக்குடைபட்ட காவாலி இஸ்லாமியவாதிகள்!

ATHEIST HOUSE TAMIL ஊடாக முன்னாள் முஸ்லிம்களும், அறிவுசார் நாத்தீகர்களும் இஸ்லாமிய மத விமர்சனங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிளப்ஹவுஸ் இஸ்லாமியவாதிகள் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வந்தார்கள், இஸ்லாம் தொடர்பான இனிப்புப் பூசப்பட்ட பொய்களை ஆஹா ஓஹோ என்று அமர்க்களமாக ஹவுஸ்புல் கேட்போருடன் அரங்கேற்றி வந்தார்கள். என்று ATHEIST HOUSE TAMIL மூலம் இஸ்லாமிய மத விமர்சனங்கள முன்வைக்கப்பட்டு இஸ்லாத்தின் உண்மைத் தோற்றம் தோலுரிக்கப்படுவது ஆரம்பமானதோ, அன்றுடன் இஸ்லாமியவாதிகளின் கூடாரம் காலியாக ஆரம்பித்தது. இஸ்லாமியவாதிகளின் கூடாரத்தை காலியாக்கியத்தில் இஸ்லாத்தைக் கற்ற கிறிஸ்தவர்களின் வகிபாகத்தையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.


இஸ்லாம் பற்றிய உண்மைகள் எதுவுமே தெரியாத அப்பாவிகளை வைத்துக் கொண்டு ‘இதுதான் இஸ்லாம்’ என்று உருட்டிக் கொண்டிருந்தவர்களின் கூடாரம் ஈயடிக்க ஆளில்லாத லெவலுக்குக் காலியாகவே
, தலைப்புப் போட்டு தமக்குள்ளேயே அழுது புலம்பி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள் இஸ்லாமியவாதிகள். தமக்குள்ளே பேசி ‘விவாதம் என்று ஏதாவது செய்தால் மட்டும் தான் இனிமேல் கூட்டம் சேர்க்க முடியும் (ஒலிப்பதிவு கைவசம் உள்ளது) என்று முடிவெடுத்துவிட்டு, தெருவில் போறவன் வாறவனை எல்லாம் “விவாதத்துக்கு வாயா, விவாதத்துக்கு வாயா” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக கொஞ்சிக் கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியவாதிகள். 


சரி, இவர்கள் என்னதான் இஸ்லாத்தைப் பற்றி விவாதித்துவிடப் போகின்றார்கள், ஆகவே மொத்தமாகவே சமாதி கட்டிவிடுவோம் என்று முடிவெடுத்து ATHEIST HOUSE TAMIL சார்பில் ‘முஹம்மது’ என்ற தலைப்பில் விவாதிப்பதற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. பகிரங்க விவாத அழைப்பிற்குப் பதிலளிக்க வந்த இஸ்லாமியவாதிகள் “முஹம்மதா? அய்யோ அய்யோ எங்களால் முடியாது, சாமி 10 கேள்விகள் எழுதிக் கொடுங்கள், படித்துவிட்டு வந்து பதில் சொல்லுகின்றோம்” என்று கெஞ்சி அசிங்கப்பட்ட நிகழ்வு கிளப்ஹவுஸ் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. (இதுவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது) கிறிஸ்தவர்கள் அதை வைத்து கிண்டலுக்கு மேல் கிண்டல் பண்ணி இஸ்லாமியவாதிகளின் BP யை ஏற்றியதெல்லாம் தனிக்கதை. இஸ்லாமியவாதிகள் மூடிய அறைக்குள் பேசிக்கொண்டு இருந்த பொழுது எனது புகைப்படத்தை தனது DP யில் வைத்துக் கொண்டு அவர்களை சார்ந்த ஒரு இஸ்லாமியவாதி உள்ளே செல்ல “அய்யோ, எப்பிடி றிஷ்வின் இங்க வந்தான் என்று நான் பயந்துட்டேன்” என்று இன்னொரு இஸ்லாமியவாதி அலறியதெல்லாம் வேற லெவல். (அதுவும் கூட ஒலிப்பதிவாக நம்மிடம் உள்ளது.)


‘முஹம்மது
என்ற தலைப்பில் பேச கிளப்ஹவுசில் தமிழ் தெரிந்த எந்த இஸ்லாமியவாதிக்கும் தில்லு இல்லை என்பது புரிந்ததால் ‘தமிழ் தெரிந்த இஸ்லாமிய அறிஞர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், PJ யை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், ஏன் அல்லாஹ்வை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள்’ என்று பகிரங்க விவாத சவால் விடப்பட்டு அந்தச் சவால் இன்று வரை பதிலளிக்கப்படாமாலேயே இருக்கின்றது. இந்நிலையில் யாரோ ஒருவர் PJ இடம் சென்று ‘அண்ணே, அவனுங்க உங்களைத்தான் கூபிட்றாங்க, நீங்களாவது வந்து நம்ம அல்லாஹ்வ காப்பாத்துங்க’ என்று கெஞ்ச, அவரோ “உங்களுக்கு நாலு கேள்வி கேட்கத் தெரியாவிட்டால் கிளப்ஹவுஸ் பக்கமே போகாதீர்கள், நானும் வரமாட்டேன்” என்று பதில் சொல்லிவிட்டு பதுங்கிக் கொண்டார். ( https://youtu.be/2sf5Sdl2ltA )


எப்படியாவது கிளப்ஹவுசில் இஸ்லாத்தின் மானத்தை காப்பாற்றி விட வேண்டும் என்ற நப்பாசையில் இலங்கை ஹபுகஸ்தலாவையைச் சேர்ந்த
, சிங்கப்பூரில் தொழில் செய்து வந்த சஜாஃப் அஹமட் என்கின்ற தீவிரவாத சிந்தனை கொண்ட இஸ்லாமியவாதியால் பெரிய பில்டப் கொடுக்கப்பட்டு இஸ்லாமிய அறிஞராக களம் இறக்கப்பட்டவர் தான் தற்பொழுது பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடிக்கொண்டு இருக்கும் இந்த Shan Siraj என்பவராகும். Shan Siraj என்றால் யார் என்று தெரிந்து இருக்காத தமிழக இஸ்லாமியவாதிகள், தங்களையும் இஸ்லாத்தையும் மீட்க இலங்கையில் இருந்து Shan Siraj என்ற மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் வரப்போகின்றார், வந்ததும் முன்னாள் முஸ்லிம்களை எல்லாம் அடித்து உதைத்து பெண்டு எடுக்கப் போகின்றார் என்று கற்பனையில் மிதந்தார்கள், ஆனால் Shan Siraj வந்ததும் தான் அவர்களுக்குப் புரிந்தது இது ஒரு புஸ் வெடில் (டம்மி பீஸ்) என்கின்ற விடயம். அவமானப் பட்டுப் போன Shan Siraj, தனது கிளப்ஹவுஸ் சஹாபாக்கள் போலவே தனிமனித தாக்குதல் எனும் கீழ்த்தரமான நபிவழி தஃவா பணியில் தானும் இணைந்து கொண்டு என்னைப் பற்றி அவதூறு, பொய் கூறி இருக்கின்றார். (ஒலிப்பதிவு உள்ளது.)


Shan Siraj உடைய சஹாபாக்களான கிளப்ஹவுஸ் இஸ்லாமியவாதிகளின் நிஜத் தோற்றம் சற்று தாமதமகாவே எமக்குத் தெரிய வந்தது, இதன் காரணத்தால் இனிமேல் அந்த கீழ்த்தரமான சஹாபாக்கள் யாருடனும் விவாதத்திற்கு செல்வதில்லை எனும் முடிவு
ATHEIST HOUSE TAMIL சார்பில் மேற்கொள்ளப்பட்டது. Shan Siraj இன் சஹாபியான ஒரு இஸ்லாமிய அறிஞரின் நறுமணம் கமழும் நபி வழி உரை இது : https://youtu.be/3G5Hv0oR96s
இன்னொரு அரைவேக்காட்டின் அறிவு மட்டத்தை உலகிற்கு எடுத்துக் கட்டும் வீடியோ இது :
https://www.facebook.com/rishvin/videos/3011983119020787 . இவர்களல்லாத இன்னொரு சஹாபி ஒரு தடவை ஆய்வுகூடம் வசந்தன் அவர்களுடன் விவாதம் செய்தார். முஸ்லிமாகப் பிறந்த அவர் ‘தான் ஒரு காலத்தில் மிகப்பெரிய அறிவியல் நாத்தீகனாக வாழ்ந்து, அதன் பின்னர் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து இஸ்லாத்திற்கு மீண்டவர்’ என்றும் தான் அறிவியலை எல்லாம் எல்லாம் கரைத்துக் குடித்த பெரிய்ய்ய்ய்ய அறிவாளி என்றும் சுய அறிமுகம் செய்தார். ‘முதலில் நீங்கள் ஏன் நாத்தீகராக மாறினீர்கள்? நாத்தீகம் என்று சொல்லி நீங்கள் என்ன என்னவெல்லாம் செய்தீர்கள்? அறிவியல் நாத்தீகம் என்று எதனைப் படித்தீர்கள்?’ என்று வசந்தன் கேட்ட கேள்விக்கு அந்த இஸ்லாமியவாதி சொன்ன பதில் அவ்வளவு அருமை. “நான் எப்பொழுதும் போதையில் இருப்பேன், போதைப்பொருள் பாவிப்பேன், தற்கொலை செய்யப் போவேன், அடிக்கடி அடிதடி சண்டைக்குப் போவேன், 5 வார்த்தைகள் பேசினால் அதில் 3 கெட்ட வார்த்தைகள் பேசுவேன்” என்று அந்த இஸ்லாமிய அறிவியல் அறிஞர் பதில் சொன்னார். இப்படிப்பட்ட மகா அறிவாளிகளின் நபிதான் Shan Siraj.


இஸ்லாம் பேசும் காவாலிக்  கூட்டத்துடன்  விவாதம் செய்வதில்லை என்ற
ATHEIST HOUSE TAMIL இன் தீர்மானத்தில் Shan Siraj இன் பெயர் காவாலிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை, ஆனால் அது தெரியாத Shan Siraj, தன்னுடனும் விவாதத்திற்கு வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் விஷயம் தெரியாமல் வாயைக் கொடுத்து இப்பொழுது வசமாக மாட்டிக் கொண்டு துடிக்கின்றார். எந்த விடயமானாலும் Zoom மூலம் தான் விவாதம் செய்வேன் என்று Shan Siraj பிடிவாதமாக சொல்லி வந்தார். கிளப்ஹவுசில் விவாதம் செய்ய அவர் மறுத்துவிட்டார்.


Islamic Information and Research Foundation எனும் மர்ம NGO ஒன்றை நடாத்திவரும் Shan Siraj, Zoom மூலம் விவாதங்கள் செய்து, அதனை ஒரு Project ஆக சமர்ப்பித்து வெளிநாடுகளில் இருந்து பணம் ஏதாவது பெற்று வருகின்றாரா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன. எனது பாதுகாப்புக் காரணங்களால் Zoom மூலம் விவாதம் செய்ய முடியாது என்கின்ற நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருந்தேன். எனினும் Shan Siraj மற்றும் அவரை சார்ந்தவர்கள் விவாதத்திற்கு வந்தால் பணம் தருவதாக வாக்குறிதி வழங்கி ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். ( https://youtu.be/ULkiRTQnSpk ) அவர்களே பணம் தருவார்கள் என்றால், நான் தற்பொழுது இருக்கின்ற இடத்தில் இருந்து Zoom மூலம் விவாதம் செய்வதுதான் பாதுக்காப்பிற்கு ஆபத்தானது ஆகவே பொருத்தமான, வசதியான இடம் ஒன்றை வாடகைக்குப் பெற்று அங்கிருந்து விவாதம் செய்வதில் எனக்கு சிக்கல்கள் இல்லை என்பதால் விவாதத்திற்கு சம்மதித்து வீடியோவும் வெளியிட்டேன். அதிலும் வீடியோவை ஆன் செய்வது நிபந்தனைக்கு உட்பட்டது என்பதையும் குறிப்பிட்டு இருந்தேன்.


இஸ்லாத்தின் இறை தூதரும்
, முஸ்லிம்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கின்றவரும், அழகிய முன்மாதிரி உள்ளவர் என்று குர்ஆனில் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளவருமான முஹம்மது பற்றி “முஹம்மது எக்கலாத்திலும் பின்பற்றப்பட தகுதியானவரா?” என்ற தலைப்பில் விவாதிப்போம் என்று Shan Siraj இன் விவாத அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு அழைத்ததும், குர்ஆனின் 74:51 வசனத்தில் சொல்லப்படும் ‘சிங்கத்தைக் கண்டும் வெருண்டு ஓடும் காட்டுக் கழுதைகள்’ போன்று பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடிவிட்டார் Shan Siraj. பின்னர் சுதாகரித்துக் கொண்டு சம்மந்தமில்லாத ஏதேதோ வரட்டுத் தலைப்புக்களை தூக்கிக்கொண்டு வருகின்றாரே தவிர, முஹம்மதைப் பற்றி பேசவே பயந்து நடுங்குகின்றார், குளிர்க் காய்ச்சல் பிடித்த பலவீனமான நோயாளி போல. தமது நபியே நடுங்கிப் போய்விட்டதால் விரக்தியடைந்துள்ள Shan Siraj இன் காவாலி சஹாபாக்கள், தமக்குக் கைவந்த இஸ்லாமிய தஃவா முறையான தனிமனிதத் தாக்குதலில் இறங்கி விட்டார்கள், இஸ்லாத்தையும், முஹம்மதையும், அல்லாஹ்வையும் காப்பாற்றுவதற்காக.


எமது இந்த விவாதச் சவால் பகிரங்கமானது
, “முஹம்மது எக்கலாத்திலும் பின்பற்றப்பட தகுதியானவரா?” என்ற தலைப்பில் விவாதிக்க தமிழ் பேசும் எந்த இஸ்லாமிய அறிஞரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், அல்லாஹ்வை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், நாம் விவாதத்திற்குத் தயாராகவே இருக்கின்றோம். எனினும் எமது தரத்தை தாழ்த்திக்கொள்ள முடியாது என்பதால் காவாலிகள், காடையர்கள், ஆபாச அர்ச்சனை மன்னர்கள் மற்றும் ஒன்றுக்கும் உதவாத சில்லரைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.


இப்பொழுதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
, முஹம்மது பற்றி முன்னாள் முஸ்லிம்களுடன் விவாதிக்க விஷயம் தெரிந்த எந்த இஸ்லாமிய அறிஞரும் முன்வரவே மாட்டார்கள். முஹம்மதைப் பற்றி விவாதித்தால் மொத்த இஸ்லாமுமே நாறிவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும், ஆகவே தற்பொழுது Shan Siraj காட்டிக்கொண்டு இருப்பது போல வேறு ஏதாவது பூச்சாண்டி வேண்டுமானால் காட்டுவார்கள், விவாதத்திற்கு மட்டும் வரவே மாட்டார்கள்.



Shan Siraj உடைய Islamic Information and Research Foundation பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இந்த NGO தொடர்பான விடயங்கள் மர்மமாகவே உள்ளன. பெரிய அளவிலான ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்துவது போன்ற தோரணையில் Islamic Information and Research Foundation என்று பெயரிட்டு இருந்தாலும், இதன் நிர்வாக அங்கத்தவர்கள், பதவிநிலை உத்தியோகத்தவர்கள் யார் என்ற ஷமீல் ஜெய்னுலாப்தீனின் கேள்விகளுக்கு இன்று வரை Shan Siraj இனால் பதில் வழங்க முடியவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. குறித்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்ககளின் பெயர் விபரங்களை Shan Siraj மறைக்கின்றார் என்றால் ஒன்றில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஏதாவது குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்பு உடையவர்கள் அதில் இருக்கலாம், அல்லது போலியாக இப்படி ஒரு பெயரை வைத்து பெரிய ஒரு நிறுவனம் ஒன்று இருப்பது போன்று காட்டிக் கொண்டு அதிலே தனது மனைவி மற்றும் குடும்பத்தவர்களை நிவாகத்தில் வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் Shan Siraj ஈடுபட்டு இருக்க வேண்டும். எது எவ்வாறு இருந்த பொழுதும் Islamic Information and Research Foundation ஊடாக Shan Siraj மேற்கொண்ட ஒரு பெரிய மோசடி வேலை தொடர்பான தகவல் ஆதரங்களுடன் கிடைத்துள்ளது, எனினும் அது இந்த விவாதத்துடன் தொடர்பில்லாத விடயம் என்பதால் அது குறித்து இங்கே பேசவில்லை, ஆனால் உரிய நேரத்தில் உரிய விதத்தில் மோசடி பகிரங்கப் படுத்தப்படும் என்பதை மட்டும் கூறிக் கொள்கின்றேன்.



மீண்டும் ஞாபகமூட்டுகின்றேன்
, காவாலிகள், காடையர்கள், ஆபாச அர்ச்சனை மன்னர்கள் மற்றும் ஒன்றுக்கும் உதவாத சில்லரைகள் தவிர்ந்த தமிழ் பேசும் எந்த இஸ்லாமிய அறிஞருடனும் “முஹம்மது எக்கலாத்திலும் பின்பற்றப்பட தகுதியானவரா?” என்ற தலைப்பில் கிளப்ஹவுஸ் மூலம் விவாதம் செய்ய தயாராக இருக்கின்றோம். Zoom அல்லது அது போன்ற வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று வேண்டினால், நான் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து அதனை மேற்கொள்வது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது, ஆகவே வேறொரு பொருத்தமான, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று ஏற்பாடுகளை செய்வதற்கான முழுமையான செலவுகளையும் விவாதத்திற்கு வருபவர்களே வழங்க வேண்டும். யாராவது பொருத்தமானவர்கள் விவாதத்திற்கு வருகின்றார்களா என்று காத்திருக்கின்றோம். எது எப்படிப் போனாலும் முஹம்மதைப் பற்றிப் பேச எந்த இஸ்லாமிய அறிஞருக்கும் தைரியம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.


-றிஷ்வின் இஸ்மத்
 
20.11.2021