விவாத அழைப்பு : முஹம்மது எக்காலத்திற்கும் பின்பற்றப்பட தகுதியானவரா?


"முஹம்மது எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமானவரா" என்ற தலைப்பில் விவாதிக்க இஸ்லாமியவாதிகளுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் பகிரங்க அழைப்பு. "முஹம்மது எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமானவரா?" என்ற தலைப்பில் கிளப்ஹவுஸ் ஊடாக தமிழில் விவாதிக்க பகிரங்கள் அழைப்பு. மேற்படி தலைப்பில் கிளப்ஹவுசில் விவாதிக்க தகுதியான ஒருவர் கூடவா இந்த உலகத்தில் இல்லை? வாயாலே வடை சுட்டவர்கள் எல்லாம் பிடரியில் பின்னங்கால் அடி பட ஓடி ஒழிந்து கொண்டார்கள். சாக்கடை வாயர்கள், மலக்குழி வாயர்கள், காவாலிகள், காடையர்கள், ஆபாச அர்ச்சனை மன்னர்கள், ஒன்றுக்கும் உதவாத சில்லரைகள், பொய்யர்கள் மற்றும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் அலைபவர்கள் மட்டுமே ஆங்காங்கே சந்து பொந்துகளில் தலைகாட்டி தனிநபர் வசைபாடித் திரிகின்றார்கள், மற்றப்படி தகுதியான ஒருவரைக்கூடக் காண முடியவில்லை. ஆகவே விவாத அழைப்பு மீண்டும் புதுப்பிக்கப் படுகின்றது.

 

உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய மதம் என்று மார்தட்டிக் கொள்ளும் இஸ்லாத்தின் இறை தூதரைப் பற்றி முன்னாள் முஸ்லிம்களுடன் தமிழில் கிளப்ஹவுஸ் ஊடாக விவாதிக்க தகுதியான ஒரு நபர் கூட இஸ்லாத்தில் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அதற்குப் பின்னாலே பேருண்மை ஒன்று இல்லாமல் இல்லை. முஹம்மது நபியைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்தவர்களுடன் நேரடியாக விவாதித்தால், மேலும் பல பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேற அது காரணியாக அமைந்துவிடும் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமல் இல்லை, அந்த அச்சம் காரணமாகவே தகுதியானவர்கள் முஹம்மது நபியைப் பற்றி விவாதிக்க வரத் தயங்குகின்றனர். விஷயம் தெரிந்தவர்களிடம் பயங்கர அமைதி, ஆனால் சில சில்லறைகளும், சில்வண்டுகளும் மட்டுமே ஆங்காங்கே சலசலக்கின்றன. ஊருக்கு ஒரு மதரஸா, தெருவுக்கு ஐந்து மெளலவி என்றெல்லாம் இருந்தும் கூட "முஹம்மது எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமானவரா" என்ற தலைப்பில் விவாதிக்க பொருத்தமான ஒருவர் கூட இல்லை என்பது குறித்து சாதாரண முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதுடன், விவாதிப்பதற்காக வேண்டி மட்டுமாவது முஹம்மது பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும் தேடிப் படிக்குமாறு சாதாரண முஸ்லிம்களை கேட்டுக் கொள்கின்றேன்.



இதுவரை தகுதியான யாருமே விவாதிக்க முன்வராததால் விவாத அழைப்பு இன்று மீண்டும் புதுப்பிக்கப் படுகின்றது. Zoom இல் முகத்தைக் காட்டு, மூக்கைக் காட்டு, முஹம்மது நபியைப் பற்றி விவாதிக்க முடியாது, எனக்கு பணம் தருகின்றவர்கள் வழங்கியுள்ள தலைப்புக்களில் தான் விவாதிக்கலாம், ஏனெறால் அதுதான் எனக்கு வழங்கப்பட்டுள்ள ப்ரொஜெக்ட், அதை அவர்கள் சொன்னபடி செய்தால் மட்டும் தான் எனது லெட்டர் பேட் அமைப்பிற்கு பணம் கிடைக்கும்” என்ற திட்டத்துடன் வருகின்ற மத வியாபாரிகளின் பணம் உழைக்கும் சுயநலத் திட்டத்திற்கு தீனி போடப்பட மாட்டாது. இஸ்லாத்தின் ஆணிவேராக முஹம்மதே உள்ளதால் முஹம்மது நபி பற்றி மட்டுமே விவாதம் இடம்பெறும். மேலும் சாக்கடை வாயர்கள், மலக்குழி வாயர்கள், காவாலிகள், காடையர்கள், ஆபாச அர்ச்சனை மன்னர்கள், ஒன்றுக்கும் உதவாத சில்லரைகள், பொய்யர்கள் மற்றும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டு அலைபவர்கள் எக்காரணம் கொண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.

 

முஹம்மது நபியையும், அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் காப்பாற்ற விரும்புகின்றவர்கள் பொங்காமல், பொசுங்காமல், அங்கே இங்கே கத்தித் திரியாமல், வசை பாடாமல், கொலை செய்ய திட்டங்கள் தீட்டாமல், இஸ்லாத்தைக் கற்ற பொருத்தமானவர்களை வற்புறுத்தியாவது விவாதத்திற்கு அழைத்து வாருங்கள். மேற்குறிப்பிட்ட அமைப்பில் சிங்கள மொழியிலான விவாத அழைப்புக்களும் கருத்தில் கொள்ளப்படும்.



விவாதக் களம் காணும் ஆவலுடன்
றிஷ்வின் இஸ்மத்
21.11.2021