சொந்தத் தாயோடு, மகளோடு, சகோதரியோடு செக்ஸ் – இஸ்லாமிய வழிகாட்டல் இவ்வளவுதான்!


தாயோடு புணர்தல் அல்லது சகோதரியோடு புணர்தல் அல்லது மகளோடு புணர்தல் என்பதை அறிமுகம் செய்ததே இஸ்லாம் தான் – அதற்கு இன்று வரையும் இஸ்லாத்தில் விசேட அனுமதியும் உள்ளது....... முழுமையாக படியுங்கள்.


மதங்களை நிராகரிக்கும் நாத்தீகர்களுக்கும், மதங்களை பின்பற்றுகின்றவர்களுக்கும் இடையில் பல்வேறு தளங்களில் விவாதங்கள், கருத்தாடல்கள் நடப்பதுண்டு. இவ்வாறான விவாதங்கள், கருத்தாடல்களில் நாத்தீகர்களை நோக்கி இஸ்லாமியவாதிகள் முன்வைக்கும் முக்கியமான் கேள்விகளில் ஒன்றுதான் “உங்களுக்கு மதம் இல்லை, இஸ்லாமிய வழிகாட்டல் இல்லை, ஹராம், ஹலால் இல்லை, ஆகவே நீங்கள் உங்களது தாயோடு புணரலாம் அல்லவா?” என்பதாகும். பல்வேறு மதங்ககளை பின்பற்றுகின்றவர்கள் நாத்தீகர்களுடன் விவாதித்தாலும், இந்த மாதிரியான கேவலமான சிந்தனையில் உதிக்கும் கீழ்த்தரமான கேள்வியை இஸ்லாமியவாதிகளைத் தவிர வேறு எந்தத் தரப்பாரும் முன்வைத்ததை இதுவரை காணக் கிடைக்கவில்லை என்பதுடன் இஸ்லாமியவாதிகளால் இந்தக் கேள்வி கேட்கப்படாத நாத்தீக – இஸ்லாமிய விவாதங்கள் மிக அரிது என்றும் சொல்லிவிடலாம்.


‘சொந்தத் தாயோடு புணர்தல்’ என்பதை சற்று தப்ஸீர் (விரிவுரை) செய்து அதில் சகோதரி, மகள் ஆகியோரையும் சேர்த்து இஸ்லாமியவாதிகள் நாத்தீகர்களை நோக்கிக் கேள்வியாகக் கேட்பதுண்டு. ஏன் இப்படி ஒரு கேள்வியை நாத்தீகர்களை நோக்கிக் கேட்கின்றீர்கள் என்று வினவினால், “நாத்தீகர்கள் (ஓரினச் சேர்க்கையை) LGBTQIA+ இனரை ஆதரிக்கின்றார்கள், அதனால் இதையும் செய்வார்கள் அல்லவா” என்பதாக இருக்கின்றது இஸ்லாமியவாதிகளின் அறிவிற்கேற்ற பதில். இதிலிருந்து LGBTQIA+ குறித்த இஸ்லாமியவாதிகளின் புரிதல் எவ்வளவு மட்டமானது என்பதைக் கண்டுகொள்ள முடியுமாக உள்ளது.


“எங்களுடைய இஸ்லாமிய மத புத்தகத்தில் தாயை, சகோதரியை, மகளை புணரத் தடை உள்ளது, ஆகவே நாங்கள் அதனை செய்வதில்லை, ஆனால் நாத்தீகர்களுக்கு அத்தகைய தடை எதுவும் இல்லை, ஆகவே அவர்கள் அதனை செய்வார்கள்” என்பது இஸ்லாமியவாதிகளின் நியாயப்படுத்தல் வாதம் ஆகும். இஸ்லாமியவாதிகள் சுயமாக வலிந்து இவ்வாறானதொரு கேவலமான கேள்விய நாத்தீகர்களை நோக்கிக் கேட்கின்றார்களே தவிர, நாத்தீகர்கள் எங்கேயும் ‘தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணரலாம்’ என்று சொன்னதில்லை. ஆக, இஸ்லாமியவாதிகள் சுயமாக இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள் எனும் பொழுது, குறித்த கேவலமான சிந்தனை அவர்களுக்குள் சதா ஓடிக்கொண்டே இருக்கின்றது என்றும், அவர்களின் மதப் புத்தகத்தில் அதற்கு அனுமதி இல்லை என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அதனை செய்யாமல் இருக்கின்றார்கள் என்றுமே அர்த்தமாகின்றது. மதப் புத்தகத்தில் அப்படி ஒரு தடை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் நிச்சயம் தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணர்வார்கள் என்பதையே இவர்களின் வாதமும், கேள்வியும் சுட்டிக் காட்டி நிற்கின்றன.


‘முன்னாள் நாத்தீகர்கள்’ என்று தம்மை சுய அடையாளப் படுத்திக்கொள்ளும் இஸ்லாமியவாதிகள் மற்றும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்துகொண்டு இருப்பதைக் காணலாம். அதே போன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நாத்தீகர்கள் என்றும் சிலர் அறிமுகம் செய்யப்படுகின்றார்கள். இவர்கள் அனைவரும் தாம் நாத்தீகர்களாக இருந்ததாக சொல்லிக் கொள்ளும் காலத்தில் தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணரும் செயலில் ஈடுபட்டார்களா என்பதை அவர்களைக் கொண்டே தெளிவு படுத்தலாமே? அப்பொழுது நாத்தீகர்கள் தொடர்பான இஸ்லாமியவாதிகளின் கேள்விக்கு சாட்சியுடனான தெளிவான பதில் கிடைக்கும் அல்லவா? இஸ்லாமியவாதிகளே, உங்கள் கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரு முழுக்க நெய்க்கலைவானேன்? ஆகவே தம்மை ‘முன்னாள் நாத்தீகர்கள்’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இஸ்லாமிஸ்ட்டுகளிடம், அவர்கள் தமது தாயோடு புணர்ந்தார்களா, புணர தயாரான சிந்தனையில், மனநிலையில் இருந்தார்களா என்பது குறித்து வீடியோ வாக்குமூலங்களைப் பெற்று பகிரங்கமாக வெளியிடலாமே? இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?


அடுத்து தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணர்வதற்கு இஸ்லாம் வழங்கிய அனுமதி எத்தகையது என்று பார்ப்போம்.

இஸ்லாமிய நம்பிக்கைப் படியும், குர்ஆனின் படியும் அல்லாஹ் டன் டன் என்று சத்தம் கேட்கும் களி மண்ணிலிருந்து ஆதம் எனும் மனிதனைப் படைக்கின்றார். இந்த ஆதம் உலகின் முதல் மனிதனாகவும், முதல் இறை தூதராகவும் இருக்கின்றார் என்று இஸ்லாம் சொல்கின்றது.
“"டங்கு டங்கு" என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்.” (குர்ஆன் 15:26)

“அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். “ (குர்ஆன் 4:1)

திரு. அல்லாஹ் அவர்கள், ஆதம் எனும் முதல் மனிதனை களிமண்ணில் இருந்து படைத்து, அவரது விலா எலும்பில் இருந்து அவரது மனைவியை உருவாக்குகின்றார். ஆதம் தனது விலா எலும்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஹவ்வா எனும் பெண்ணுடன் புணர்கின்றார் என்றால் ஆதம் உண்மையில் புணர்ந்தது தன்னுடனேயா எனும் கேள்வி எழுகின்றது. எனினும் அதனை அப்படியே வைத்துவிட்டு முக்கியமான விடயத்திற்கு செல்வோம்.


முதல் தம்பதியினரான ஆதம் – ஹவ்வா ஆகியோருக்கு ஆண்களும், பெண்களுமான பிள்ளைகள் பிறக்கின்றனர். இஸ்லாமிய மத நம்பிக்கைப் படி ஆதம், ஆதத்தின் மனைவி ஹவ்வா, அவர்களுக்குப் பிறந்த ஆன் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகிய நான்கு பிரிவினர் மட்டுமே அங்கே உள்ளனர். அடுத்த சந்ததியினர் உருவாகி மனித இனம் பெருக வேண்டும் (அல்லது இன்று பெருகி இருக்கின்றது) என்றால் பின்வரும் சாத்தியங்கள் மட்டுமே அன்று காணப்பட்டன.

1. ஆதம் தனது மகள்மாரைப் புணர்ந்து இருக்க வேண்டும்.
2. ஹவ்வாவுடைய மகன்மார் தாயைப் புணர்ந்து இருக்க வேண்டும்.
3. ஆதம் ஹவ்வாவிற்குப் பிறந்த ஆண் பிள்ளைகள் தங்கள் சகோதரிகளைப் புணர்ந்து இருக்க வேண்டும்.

ஆக, இஸ்லாமிய மத நம்பிக்கைப் படி மேலே சொல்லப்பட்ட மூன்று சாத்தியங்களுமே நடைபெற்று இருக்க வேண்டும், அல்லது இரண்டு சாத்தியங்கள் நடைபெற்று இருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஒரு விடயமாவது கட்டாயம் நடைபெற்றே இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் மூன்றில் எதுவுமே நடக்கவில்லை என்று இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் மறுக்க முடியாது. ஆக, இஸ்லாத்தின் அடிப்படையில் மனிதர்களின் (அல்லது முஸ்லிம்களின்) ஆரம்பமே தாயைப் புணர்தல், சகோதரியைப் புணர்தல், மகளைப் புணர்தல் என்ற ஒரு அடிப்படையிலேயே இடம்பெற்று இருக்கின்றது என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கின்றது. இத்தகைய ஒரு புணர்தல் சந்ததியில் தாம் வந்ததாக இஸ்லாமியவாதிகள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தாயை, சகோதரியை, மகளை புணர்வது ஆகியவை (ஒன்று அல்லது அனைத்தும்) இஸ்லாத்தில் உள்ளவை என்பதால் இன்று இஸ்லாமியவாதிகள் நாத்தீகர்களை நோக்கிக் கேட்கும் கேள்வியும் அவர்களுக்குளே இஸ்லாமிய அடிப்படையில் உருவாகிய ஒன்றுதான் என்பது தெளிவாகின்றது. ஆக அந்தக் கேள்விக்கும், நாத்தீகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது முற்று முழுதாக் இஸ்லாம் சார்ந்த சிந்தனையால் உருவான கேவலமான கேள்வி ஆகும். இஸ்லாமியவாதிகள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுக்குள்ளே இருக்கும் கேவலமான ஒரு இச்சையை கேள்வி வடிவில் உருவாக்கி, அதனை நாத்தீகர்களை நோக்கி முன்வைத்து, அதன் மூலம் தமது உளவக்கிரத்திற்கு தற்காலிக வடிகால் தேடிக்கொள்ள முயல்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.


(ஆதம் -ஹவ்வா கதை பைபளில் இருந்து காப்பி அடிக்கப் பட்டது என்பதால் கிறிஸ்தவ மதத்திலும் இதையொத்த ஆதம், ஏவாள் கதைதான் இருக்கின்றது. எனினும் இதுவரை எந்த விவாதத்திலும் நாத்தீகர்களுக்கு எதிராக கிறிஸ்தவ தரப்பு, இஸ்லாமியவாதிகள் முன்வைப்பது போன்ற ஒரு கேவலமான கேள்வியை முன்வைத்ததைக் காணக் கிடைக்கவில்லை. அப்படி யாரவது முன்வைத்தால், அந்தச் சந்தர்ப்பத்தில் இதுவரையான பதிவு அவர்களுக்கும் பொருந்திப் போகும்.)


தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணர்வதற்கு இஸ்லாத்தில் முழுமையான தடை இல்லை!

இஸ்லாமியவாதிகள் உருட்டுவது போன்று ‘தாயோடு, சகோதரியோடு, மகளோடு புணரக் கூடாது’ என்று இஸ்லாத்தில் நேரடியாக எந்தத் தடையும் இல்லை. எனினும் இரண்டு விதமான சட்டங்களின் அடிப்படையிலேயே அவ்வாறானதொரு முடிவுக்கு வருகின்றார்கள், அந்த முடிவை வைத்துக் கொண்டு தான் இந்த உருட்டு உருட்டுகின்றார்கள்.

“உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், ............... ...... ........ ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர்.” (குர்ஆன்:4:23.)

தாயை, சகோதரியை, மகளை திருமணம் செய்ய தடை விதிக்கும் வசனமே இதுவாகும். இது திருமணத்தை மட்டுமே தடை செய்கின்றது, திருமணத்திற்கு அப்பால் புணர்வதற்கு இந்த வசனத்தின் அடிப்படையில் தடை இல்லை.

ஆனால் “விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்!” (குர்ஆன் 7:32) என்ற வசனத்தின் மூலம் திருமணத்திற்கு அப்பால் சுதந்திரமான நிலையில் புணர்வதற்கு அனுமதி இல்லை என்று புரிந்து கொள்ளலாம். இப்பொழுது தான் இஸ்லாமியவாதிகளை நோக்கி முக்கியமான ஒரு கேள்வி முன்வைக்கப்பட உள்ளது.

(*இஸ்லாம் விபச்சாரம் என்று கூறுவது திருமணத்திற்கு வெளியே அடிமை அல்லாத ஒருவருடன் உடலுறவு கொள்வதையே ஆகும்.)


“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.” (குர்ஆன் 23:5-6)

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவனது மனைவிகள், வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் (அடிமைகள் – ஜிஹாதிலே பிடிக்கப்படும் பெண்கள்) ஆகியோருடன் புணரலாம் என்று குர்ஆன் அனுமதி வழங்கி இருக்கின்றது.

அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் புணரும் பொழுது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி 2229)

மேற்படி ஹதீஸின் படி போரிலே பிடிக்கப்படும் பெண்களுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவும், அஸ்ல் செய்யவும், அந்தப் பெண்களை வேறொருவருக்கு நல்ல விலைக்கு விற்கவும் இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.


இப்பொழுது கேள்வியை நன்றாகக் கவனியுங்கள் :

ஆண் ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்டார், ஆனால் அவரது தாய், சகோதரிகள், மகள்மார் ஆகியோர் இஸ்லாத்திற்கு மதம் மாறவில்லை, அவர்கள் தங்களது முன்னைய மதத்திலேயே இருக்கின்றார்கள். இந்நிலையில் (உரிய காரணங்களுக்காக) ஜிஹாத் நடைபெற்றுகின்றது, மதம் மாறியவர் முஸ்லிமாக இருப்பதால் ஜிஹாதிற்கு செல்கின்றார், அவரது தாய், சகோதரிகள், மகள்மார் ஆகியோர் எதிர்த்தரப்பில் யுத்த காளத்திற்கு வருகின்றார்கள். யுத்தத்தில் இஸ்லாமிய ஜிஹாதிகள் வெற்றி பெற்று விட்டார்கள். இஸ்லாத்திற்கு மதம் மாறிய குறித்த நபரின் தாய், சகோதரிகள், மகள்மார் ஆகியோர் கைதிகளாக பிடிக்கப்படுகின்றார்கள், இந்த நிலையில் அவரது தாயாரோ, சகோதரியோ, மகளோ அவருக்குரிய கனிமத் (போரில் கிடைக்கும் பங்கு) ஆக ‘அடிமை’ அல்லது ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவள்’ என்ற அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டால் இவர் அந்தப் பெண்ணை (தாயை, சகோதரியை, மகளை) புணர்வதற்கு இஸ்லாத்தில் எங்கே தடை செய்து இருக்கின்றது? அதல்லாமல் அந்தப் பெண்களில் ஒருத்தியை தனது பங்கிற்கு பெற்றுக் கொள்ளும் வேறொரு ஜிஹாதி ஒருவன், இஸ்லாமிய வழிகாட்டலின் படி அஸ்ல் முறையில் வன்புணர்வு செய்துவிட்டு அந்தப் பெண்ணை நல்ல விலைக்கு இவருக்கே விற்றுவிட்டால், அந்தப் பெண்ணை (தாயை, சகோதரியை, மகளை) இவர் புணர்வதை இஸ்லாம் எங்கே தடை செய்து இருக்கின்றது?


இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், இஸ்லாத்தை ஏற்காத தனது தனது மகனைக் (தனது சொந்த மகன் என்றும் பார்க்காமல்) கொலை செய்வதற்குத் தயாராக இருந்த செய்தியை அபூபக்கர் அவர்களின் வாழ்வில் பார்க்கின்றோம், ஆம் அபூபக்கர் தனது சொந்த மகன் என்றும் பார்க்காமல் அப்துர் ரஹ்மானை கொல்லத் தயாராக இருந்தார். ஆகவே மேலே கேட்ட கேள்வியிலும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பமே குறிப்பிடப் பட்டுள்ளது.


இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம் ஜிஹாதிக்கு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அவரது தாய், சகோதரி, மகள் ஆகியோர் ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட’ அடிமையாகக் கிடைத்தால் அவர்களைப் புணரக் கூடாது என்கின்ற நேரடியான தடை இஸ்லாத்தில் எங்கே உள்ளது என்பதற்கான தெளிவான பதிலை குர்ஆன், ஹதீஸில் இருந்து எந்த இஸ்லாமியவாதியாவது, அறிஞராவது எடுத்துக் காட்டினால், முதலில் பதிலளிப்பவருக்கு இலங்கை ரூபாய் ஐயாயிரம் பரிசாகத் தர நான் தயாராக இருக்கின்றேன், பதில் சொல்ல யாராவது தயாரா? காத்திருக்கின்றேன்! 5000 ரூபாயும் காத்திருக்கின்றது.

- றிஷ்வின் இஸ்மத்
23.10.2021