எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?

அல்லாஹ் என்பவர் உண்மையான, எல்லாம் வல்ல, யாவற்றையும் அறிந்த, முக்காலத்தையும் உணர்ந்த இறைவனாக இருந்து அவர்தான் இஸ்லாம் எனும் வேதத்துடன் முஹம்மது எனும் இறைதூதரை எல்லா மக்களுக்கும் வழிகாட்டுவதற்காக அழகிய முன்மாதிரியாக (உஸ்வதுல் ஹசனா) அனுப்பினார் என்றால், ஏன் அவரால் முஹம்மதை விட ஒரு நல்ல மனிதரை தெரிவு செய்ய முடியாமல் போனது? முஹம்மது தான் வேண்டும் என்றால் ஏன் முஹம்மதை ஒரு நல்ல மனிதராக வாழ வழிநடாத்த முடியாமல் போனது?

 

(1)ஒரே ஒரு துணையுடன் நல்லபடியாக வாழக் கூடியவராக,

(2)யுத்தம் செய்யாதவராக,

(3) கப்பம் (ஜிஸ்யா) வாங்காதவராக,

(4) கொள்ளையடிக்காதவராக,

(5) போர் செய்து கொள்ளை அடித்த பொருட்களில் 20% பங்கு கேட்காதவராக,

(6) 'மனைவிக்கு அடி' என்று போதனை செய்யாதவராக,

(7)போர் செய்து பெண்களைப் பிடித்து வன்புணர்வு செய்து விந்தையும் உள்ளே செலுத்திவிட்டு நல்ல விலைக்கு விற்பனை செய் என்று போதனை செய்யாதவராக,

(
8) பாலியல் அடிமைகளை வைத்திருக்காதவராக,

(9) நறுமணம் பூசிக்கொண்டு செல்லும் பெண்களை விபச்சாரி என்று முத்திரை குத்திக் கேவலப் படுத்ததவராக,

(10) ஹதீஸ் என்று சொல்லி அங்கே இங்கே என்று கடும் குழப்பம் உண்டாகாமல் தனது போதனைகளை, செயல்களைத் தானே தெளிவான மொழிநடையில் புத்தகமாக எழுதி பாதுகாப்பாக மக்களிடம் சேர்ப்பிக்கும் அளவு அடிப்படைக் கல்வி அறிவுள்ளவராக,

(11) குரைசிக் கோத்திர நடையில் அரபு மட்டும் பேசாமல் ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன், தமிழ் போன்ற பல மொழி திறமையுள்ளவராக,

(12) நாடு இரவில் யாருக்கும் தெரியாமல் சிறகு வைத்த கழுதையில் ஏறி மிஹ்ராஜ் (விண்வெளிக்கு) போய் வந்தேன் என்று கதை விடாமல், அப்படிப் போவதாக இருந்தால் கூட எல்லா மக்களையும் பகல் நேரத்தில் அழைத்து அவர்கள் முன்னிலையில் பகல் வெளிச்சத்தில் எல்லோரும் தெளிவாகக் காணக் கூடிய வகையில் "See you soon, இன்ஷா அல்லாஹ்" சொல்லிவிட்டு போய்வரக் கூடிய நேர்மையுள்ளவராக,

(13) 3, 5 என்று ஒற்றைப்படைக் கற்களால் கக்கா துடைத்து, கால் போத்தல் தண்ணீரில் வுழு செய்து, முக்கால் போத்தல் தண்ணீரில் குளிக்கும் ஒருவராக இல்லாமல் போதிய அளவு தண்ணீரில் நம்மைப் போல திருப்தியாக, சுத்தமாக அழகாகக் குளிக்கக் கூடியவராக,

(14) 53 வயதில் 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்கின்ற சிறுவர் துஷ்பிரயோகி இல்லாதவராக,

(15) 56 வயதில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து அதிர்ச்சி கொடுக்கின்ற சிறுவர் பாலியல் வன்புணர்வாளராக இல்லாதவராக,

ஒருவரை அல்லாஹ்விற்கு தெரிவு செய்ய முடியாமல் போனது ஏன்? அல்லது முஹம்மது நபியை இப்படிக் கேவலமானவராக அல்லாமல் ஒரு நல்லவராக வாழ வைக்க முடியாமல் போனது ஏன்?

 

உங்கள் தந்தையை, நீங்கள் படித்த பாடசாலையின் ஆசிரியர்கள், அதிபரை, நீங்கள் நல்லவர் என்று போற்றக்கூடிய மனிதர்களை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அவர்களில் யாராவது முஹம்மது நபி அளவிற்கு பத்துக்கு மேற்பட்ட பொண்டாட்டிகள், அதில் ஒரு 6 வயது சிறுமி என்று பல பெண்களை, பல பாலியல் அடிமைகளை வைத்துள்ளவர்களாக வாழ்கின்றார்களா? வாழ்ந்தார்களா?

நான் எனது வாழ்க்கையில் முஹம்மது நபி அளவிற்கு மோசமான, கேவலமான, குரூரமான வாழ்க்கை வாழ்ந்த யாரையும் நேரில் கண்டதில்லை. உங்கள் பக்கத்து வீட்டுக் காரருக்கு பதினோரு பொண்டாட்டிகள், அதில் ஒருத்திக்கு 6 வயது என்றால் உங்கள் தந்தை அந்த வீட்டில் உங்களை வளர விடுவாரா, அந்த மனிதருடன் பழக விடுவாரா? நீங்கள் ஒரு தந்தையாக இருந்தால் உங்கள் குழந்தைகளை அப்படியான ஒரு மனிதன் இருக்கும் சூழலில் வளர விடுவீர்களா? அந்த மனிதனுடன் பழக விடுவீர்களா?

ஏன் அல்லாஹ்விற்கு ஒரு நல்ல மனிதனை தெரிவு செய்ய முடியாமல் போனது? அல்லது தெரிவு செய்த மனிதரை ஒரு நல்ல மனிதராகப் பேணக் கூடத் தெரியாமல் போனது? அல்லாஹ் திறமை இல்லாத ஒரு இறைவனா?

உண்மையில் அல்லாஹ் என்ற இறைவன் முஹம்மது அவர்களை நபியாக தெரிவு செய்தாரா? இல்லை முஹம்மது என்ற மனிதர் 'அல்லாஹ்' என்ற பெயரை பயன்படுத்தி அனைவரையும் ஏமாற்றினாரா? சிந்தியுங்கள்.


இது குறித்து எந்தத் தகுதியான மெளலவியுடனும் இணையம் மூலமாக கருத்தாட தயார். அறிவுள்ள மெளலவிகள் இருந்தால் அழைத்து வாருங்கள். அப்படி யாரும் இல்லை என்றால், நீங்களாவது சுயமாக சிந்தியுங்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
 19.04.2023