திரு. முஹம்மது நபியை சித்திரம் வரையலாமா? அல்லாஹ்விற்கு ஏன் சிலை இல்லை?

 

திரு. முஹம்மது நபியை சித்திரமாக வரைவதற்கு குர்ஆனில் ஒரு இடத்திலாவது தடை இருக்கின்றதா என்று கேட்டு இருந்தேன், இதுவரை யாராலும் ஒரு வசனத்தைக் கூட காட்ட முடியாமல் போயுள்ளது. முஹம்மது நபியை வரைவதற்கு குர்ஆனில் நேரடியாக ஒரு தடையும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். குண்டுவெடிப்புகள், படுகொலைகள் போன்றவற்றில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஈடுபட்டதும், அவற்றை மூடி மறைப்பதற்காக "குர்ஆனில் இவ்வாறு சொல்லப்படவில்லை" என்று சொல்கின்ற புதிய பழக்கம் ஒன்று வக்காலத்து வாங்கி இஸ்லாமிஸ்டுகள் மத்தியில் ஏற்பட்டு இருப்பதனால் தான் முஹம்மதை வரைவதை தடை செய்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்டேன். சுவர்க்கத்தில் ஜிஹாதிஸ்டுகளுக்கு 72 கன்னிகளை தருவதாக குர்ஆனில் கூறப்படவில்லை என்று கூறிய வக்கலாத்து வாங்கிகளைக் கூட கண்டு இருக்கின்றேன், அந்த அடிப்படையில் பார்த்தால் முஹம்மதை வரைவதற்கு குர்ஆனில் ஒரு தடையும் இல்லை.


முஹம்மது நபியை நேரில் பார்த்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்பதால் அவரை எப்படி வரைய முடியும் என்று ஒரு கேள்வி எழும். அவரை நேரில் பார்த்தவர்கள் உயிருடன் இல்லை என்றாலும், அவரை நேரில் பார்க்காமல், அவரை கனவில் பார்த்த பல இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளனர். முஹம்மது நபியை ஒரு தடவையாவது கனவில் கண்டுவிட வேண்டும் என்ற போராவலுடன் அலையும் பல இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆகவே நேரில் ஒருவரை பார்க்கவில்லை என்பதற்காக அவரை வரைய முடியாது என்கின்ற வாதம் வலுவற்றுப் போகின்றது.


அப்படியான ஒரு வாதத்திற்கு தோழர் சாதிக் சமது இப்படி பதிலளிக்கின்றார் :
"மூமின்க என்றலே மூளை இல்லாதவர்கள் என்றாச்சு (கவனிக்க அறிவு இல்லைன்னு சொல்லகூடாது குரானில் மூளை பற்றி சொல்லாததால் மூளையில்லை என்று சொல்லலாம். மூளையே இல்லாமல் எப்படி அறிவுன்னு கேட்க கூடாது )

Mohamed Raseeth பாயீ முஹம்மதை நேரடியா பார்க்காமல் வரைய கூடாது என்பது லாஜிக் என்றால் முஹம்மதை நேரடியாக பார்க்காமல் எப்படி ஸல'வாத்து ' எப்படி உயிருக்கு மேலாக ஈமான் கொள்வதெல்லாம்? லாஜிக் இல்லையே பாயீ அப்புறம் திர்மிதீயிலே முஹம்மதின் வர்ணனை உண்டே மூக்கு இப்படி இருக்கும் கன்னம் இப்படி கண் இப்படி வாய் இப்படி உயரம் இப்படி மசுருலே வெள்ளை இத்தனை என்றெல்லாம் இருக்கே அதை வைத்து ஒரு வடிவத்தை கொடுக்க முடியாதா?"

முஹம்மது நபியை நேரில் கண்டிருக்காத ஷேய்க் அப்துல்லாஹ் கதானி, ஷேய்க் அப்துல் ஹக் முஹத்தித் தஹ்லவி, அஷ்ரப் அலி தானவி உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் அவரை கனவில் கண்டதாக கூறி இருக்கின்றார்கள். இதல்லாமல் மிக முக்கியமாக சஹீஹுல் புகாரியை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் முஹம்மது நபி கனவில் வந்து சொன்னதனால் தான் ஹதீஸ்களை தொகுக்க ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். இமாம் புகாரியும் முஹம்மது நபியை நேரில் கண்டவர் அல்ல. இமாம் புகாரி சொன்னதை நம்பாவிட்டால், முழுமையாக புகாரி ஹதீஸ்களையே நிராகரிக்க வேண்டி வரும், ஏனென்றால் ஒரு பொய்யரால் அவை தொகுக்கப்பட்டவை என்றாகிவிடும்.

முஹம்மது நபி எவ்வாறு இருந்தார் என்பதை ஹதீஸ்கள் மிகவும் தெளிவாக வர்ணிக்கின்றன, எந்த அளவுக்கு என்றால், அவரது தாடியில் எத்தனை நரைத்த முடிகள் இருந்தன என்று எண்ணிக் குறிப்பிடுகின்ற அளவுக்கு அவரைப் பற்றிய வர்ணனைகள் உள்ளன. ஆகவே முஹம்மது நபியை சித்திரமாக வரைந்தால் எப்படியான உருவம் வரும் என்று அறிய இந்த இணைப்பை அழுத்துங்கள் : https://youtu.be/VfXzz68OJwI


அல்லாஹ்வை வரைவது எப்படி என்பதை நாம் இப்பொழுது பார்க்க தேவையில்லை, ஏனென்றால் அல்லாஹ்விற்கு இரண்டு கைகள் உள்ளன, இரண்டுமே வலது பக்கமே உள்ளன என்று ஹதீஸ்கள் ( ‏ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ ‏ ஆதாரம் : நஸாயி 5379) குறிப்பிடுகின்றன, ஆகவே வலது பக்கம் மட்டும் இரண்டு கைகள் உள்ள, இடது பக்கம் ஒன்றுமே இல்லாத அல்லாஹ் விகாரமான தோற்றத்தில் இருப்பது நிச்சயம். மேக்கப் இல்லாத பொழுது சிலர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது இல்லை என்பது போல, முஹம்மது நபி கற்பனை செய்த அல்லாஹ் விகாரமான தோற்றத்தில் இருப்பதால் சிலை வைக்க தடை செய்து இருக்கலாம். 

குறிப்பு : முஹம்மது நபியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்பதால், அவரை மதிக்கும் முகமாக முஸ்லிம்களைப் போன்று சல்லால லாலஹு எல்லாம் போட முடியாது என்பதால் திரு.முஹம்மது நபி என்று மரியாதை கொடுத்து இருக்கின்றேன். 

பொறுப்புத்துறப்பு: எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.