இஸ்லாத்தின் தோல்வியை கட்டியம் கூறும் வக்காலத்து வாங்கிகளின் அதிகரிப்பு


இணைவைப்பு, சிலைவணக்கம் ஆகியவற்றை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்காத, மீட்சியே இல்லாத நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் ஷிர்க் எனும் மிகப் பெரும் பாவமாகக் கருதும் இஸ்லாத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வங்கரோத்து (திவால்) நிலை காரணமாக, இஸ்லாத்தின் பெயரால் மற்றவர்களை கவர்கின்ற மாதிரி எதையாவது செய்து இஸ்லாத்தை காப்பற்ற வேண்டும் என்கின்ற நிலையை இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்றவர்கள் அடைந்து விட்டார்கள் என்பதை நிதர்சனமாகக் காணக்கூடியதாக உள்ளது.



முக்காலத்தையும் உணர்ந்த இறைவனால் உலகம் அழியும் வரை உள்ள மக்கள் அனைவரும் பின்பற்றுவதற்காக அனுப்பப்பட்ட பாதுகாக்கப்பட்ட இறுதி வழிகாட்டல் தான் இது என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம், முஹம்மது கொலைசெய்யப்பட்ட உடனேயே முஸ்லிம்களுக்குள் பிளவு உருவாகி அடி வாங்க ஆரம்பித்தது. இஸ்லாத்தை உருவாக்கிய, தன்னை இறைதூதர் எனச் சொல்லிக்கொண்ட முஹம்மது நபிக்கு ஜனாஸா தொழுகை (இறுதிப் பிரார்த்தனை) கூட ஜமாத்தாக (கூட்டாக) நடாத்த முடியாமல் போனது. பொதுவாகவே முஸ்லிம்களின் உடல்கள் ஒரு நாளில் அடக்கம் செய்யப்பட்டாலும், மூன்று நாட்கள் வரை முஹம்மதின் உடலையே அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக மாறியது. முஹம்மது மரணித்து சில மாதங்களில் அவரது மகள் கொலை செய்யப்படுகின்றார். மருகனுக்கும், மனைவிக்கும் இடையில் சுமார் பத்தாயிரம் பேர் கொலை செய்யப்படும் அளவிற்கு யுத்தமே நடக்கின்றது. (இவற்றை சிந்தித்தாலே இஸ்லாம் இறைவேதம் இல்லை என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.) இப்படியான ஆரம்ப வரலாறு கொண்ட இஸ்லாத்தை குருதி தோய்ந்த வாள்கள்தான் உலகம் முழுவதும் எடுத்துச் சென்றன.



பெரும்பாலும் பிறப்பாலே முஸ்லிம் ஆகி விட்டவர்களில் ஒரு பிரிவினருக்கு "இஸ்லாம் பாதுகாக்கப்பட்ட, எக்காலத்திற்கும் பொருத்தமான இறைவேதம் இல்லை" என்கின்ற உண்மை புரிந்தாலும், அவர்களின் ஈகோ காரணமாகவோ, அல்லது முஸ்லிம் அல்லாத ஏனைய மனிதர்கள் மீது உள்ள வெறுப்பு காரணமாகவோ, அல்லது வேறு எதோ காரணங்களிற்காகவோ உண்மையை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல், ரூம் போட்டு யோசித்து பொய்களை உருவாக்கி இஸ்லாத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கின்றார்கள். இத்தகையவர்கள் தமிழில் இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள் என்றும் ஆங்கிலத்தில் Islamic Apologists என்றும் அறியப்படுகின்றார்கள்.


இன்றைய அறிவியல் முன்னேற்றம், தகவல் தொழில் நுட்பம், சுயசிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முன்னால் வங்கரோத்து நிலையை அடைந்துவிட்ட இஸ்லாத்தை காப்பாற்ற குர்ஆன், ஹதீஸ் போன்ற இஸ்லாமிய மூலாதரங்களோ, முஹம்மது நபியோ இனிமேலும் உதவப் போவதில்லை என்பதை நன்றாக புரிந்துகொண்ட இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள், இஸ்லாத்திற்கு நேர் முரணான செயல்களை "இவைதான் இஸ்லாம்" என்று போலியாக செய்தேனும் இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும் என்று படாத பாடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. குரான், ஹதீஸ் கூறுகின்ற, முஹம்மது போதித்த இஸ்லாம் இனிமேலும் உதவாது என்பதை புரிந்து கொண்டதால், தங்களால் முடிந்த அளவிற்குப் பொய்களை உருவாக்கிப் பயன்படுத்தியாவது இஸ்லாத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்று களமிறங்கி இருக்கின்றார்கள். இஸ்லாம் இறைவேதம், அல்லாஹ்வே இறக்கிவைத்தார், அவரே பாதுகாப்பார் என்று இவர்கள் நம்புவதில்லை என்பதாலேயே இவர்கள் சுயமாக பொய்களை உருவாக்கி வருகின்றனர்.


"சுவர்க்கத்தில் 72 கன்னிப் பெண்கள் தருவேன் என்று அல்லாஹ் சொல்லவில்லை, அல்லாஹ் சொன்னது 72 காய்ந்த முந்திரிகைகள்" என்ற பொய்யில் இருந்து, ISIS இற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை, இஸ்லாம் அடிமை முறையை முற்றாக ஒழித்துவிட்டது, இஸ்லாத்தில் சிறுமிகளை திருமணம் செய்வது தடை, இஸ்லாம் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது இஸ்லாத்தில் பாலியல் சமத்துவம் இருக்கின்றது, இஸ்லாத்தில் கல்லெறி தண்டனை இல்லை என்றெல்லாம் பொய்களை தொடர்ந்தும் உற்பத்தி செய்துகொண்டே செல்கின்றார்கள் வக்காலத்து வாங்கிகள். (சுவர்க்கத்தில் அல்லாஹ் மாமா மூமின்களுக்கு கொடுக்கப் போகும் கன்னிப்பெண்களின் கால்கள் எப்படி இருக்கும், மார்புகள் எப்படி இருக்கும் என்ற விபரங்கள் பருவமடியாத பெண்களை திருமணம் செய்து விவாகரத்தும் செய்வது, அடிமைகளை எப்படி நடத்துவது, எப்படி பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற விடயங்கள் இஸ்லாத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன, விரிவஞ்சி ஆதாரங்கள் தவிர்க்கப்படுகின்றன)


முஹம்மது நபி செய்த பல செயல்களை, குரான் உன்னத செயல்கள் என்று போற்றில் புகழும் பல செயல்களை அவை இஸ்லாம் இல்லை என்று மறுக்கும் நிலைக்கு வக்காலத்து வாங்கிகள் வந்துவிட்டார்கள். சிலை வணக்கத்தை வெறுக்கும் இஸ்லாம், சிலைகளை உடைப்பதை பல இடங்களில் ஊக்கப்படுத்தியும், கிலாகித்தும் சொல்லியுள்ளது. முஹம்மது நபியே சிலைகளை உடைத்து இருக்கின்றார். (ஆதாரங்களில் சிலவற்றை முன்னைய ஆக்கத்தில் வழங்கி இருக்கின்றேன்.) எனினும் அண்மையில் மாவனல்லையில் இஸ்லாமிய இளைஞர்கள் புத்தர் சிலைகளை உடைத்ததும், அந்த இளைஞர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயற்பட்டு விட்டார்கள் என்றும், இஸ்லாத்திற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் பொய்களை அவிழ்த்து விடுகின்றார்கள். இரண்டாயிரமாவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சிலைகளை உடைத்ததும் இப்படி சொன்னவர்களின் எண்ணிக்கையை விட இப்பொழுது அப்படி சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.


கேரளாவில் இந்த வக்காலத்து வாங்கிகள் இன்னும் ஒரு படி மேலே ஏறி, சபரிமலை சென்று சிலை வணக்கம் செய்ய பெண்களுக்கு உரிமை கொடு என்று போராட முஸ்லிம் பெண்களை போராட்டத்தில் இறக்கி, இஸ்லாம் சிலை வணக்கத்தை ஆதரிக்கின்றது, இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்றெல்லாம் பொய்களை அவிழ்த்து விட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.


ஒரு பெண் நபியாக இருந்ததாக இஸ்லாத்தில் எங்கேயும் ஆதாரம் கிடையாது, அத்துடன் இன்றுவரை கஹ்பாவிலோ, அல்லது ஒரு முஸ்லிம் ஊரின் பிரதான பள்ளிவாசலிலோ எந்த ஒரு பெண்ணும் கூட்டுத் தொழுகைக்கு இமாமாகக் கூட நியமிக்கப்பட்டது கிடையாது. இப்படியாக பெண்களுக்கு எந்த நியாயமான உரிமைகளுமே கொடுக்காத, சொத்து, சாட்சி சொல்லுதல் ஆகியவற்றில் ஒரு ஆணை இரண்டு பெண்களுக்கு சமனாக்கிய ஒரு மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது என்று காட்டி உலகை ஏமாற்ற வக்காலத்து வாங்கிகள் சிலை வணக்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்றால், இஸ்லாம் எந்த அளவு அறிவியல் வங்கரோத்து (திவால்) நிலையை அடைந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.


இன்றைய உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இஸ்லாம் இந்த அளவு தடுமாறும் நிலையில், முஹம்மது நபிக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லவேண்டிய நிலை நாளை இந்த வக்காலத்து வாங்கிகளிற்கு ஏற்படக் கூடும். மேலே குறிப்பிட்டுள்ள விடயங்கள், இஸ்லாம் முக்காலத்தையும் உணர்ந்த ஒரு இறைவனால் அனுப்பப்பட்ட எக்காலத்திற்கும் பொருத்தமான, பாதுகாக்கப்பட்ட வழிகாட்டல் அல்ல என்பதை உறுதியாக சுட்டிக்காட்டி நிற்கின்றன. இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான விடயங்களைக் கூட இஸ்லாமாகக் காட்டி இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வக்காலத்து வாங்கிகள் சென்றிருப்பதானது இஸ்லாத்தின் தோல்வியையே தெளிவாகக் காட்டுகின்றது. இஸ்லாம் தேல்வி அடையாமல் இருந்திருக்குமானால், யார் என்ன நினைத்தாலும், இது இறைவன் அருளியது, இதில் மாற்றமில்லை, யாருக்கும் வெட்கப்பட்டோ, பயப்பட்டோ இஸ்லாத்தை மாற்றவோ, மறைக்கவோ தேவையில்லை என்று இவர்கள் உறுதியாக இருந்திருப்பார்கள். ஆனால் அப்படி இருக்க முடியாத நிலையை இஸ்லாம் அடைந்திருப்பதானது இஸ்லாம் அறிவியல் உலகில் தோல்வி அடைந்துவிட்டது என்பதையும், இஸ்லாம் இக்காலத்திற்கு பொருத்தமில்லை என்பது உணரப்பட்டு விட்டது என்பதையுமே காட்டுகின்றன.


அறிவியல் முன்னேற்றம், தகவல் தொழிநுட்பம், சுயசிந்தனை என்பவை மேலும் வளர்ச்சியடையும் எதிர்காலத்தில் இஸ்லாம் என்று ஒன்று இருந்தாலும் கூட, அதிலே ஆறு வயது சிறுமியை 53 வயதிலே திருமணம் செய்த, சிலைகளை உடைத்த, பத்துப் பெண்களையும், ஒரு சிறுமியையும் திருமணம் செய்துவிட்டு தனது மனைவியல்லாத பெண்ணை கற்பமாக்கிய, யுத்தத்திலே கொள்ளையடிக்கப்பட்டதில் தனக்கு 20% பங்கு கேட்ட முஹம்மது நபிக்கு இடமில்லாமல் போவது நிச்சயம்.