முஹம்மதும் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் சஹாபாக்களும், மறுக்க முடியாத ஒற்றுமைகள்

இப்பொழுது சொல்லுங்கள், அபூபக்கர் அல் பக்தாதிக்கும், ஐஎஸ்ஐஎஸ் இற்கும் முன்னோடி யார்? அபூபக்கர் அல் பக்தாதியும், ஐஎஸ்ஐஎஸ் உம் மட்டும்தானா கெட்டவர்கள்? பயங்கரவாதிகள்? இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து முஹம்மது நபியைப் பற்றியும், அவரது சஹாபாக்கள் (சகாக்கள்) பற்றியும் சற்று தெரிந்து கொள்வோம்.

அதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் சின்ஜார் மலையடிவாரத்தில் வாழ்ந்த யஸீதி மக்களுக்கு என்ன செய்தது என்பதை சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். யஸீதி மக்களின் வாழ்விடங்களை முற்றுகையிட்ட ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகள், அம்மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, வாழ்விடங்களை அழித்து, ஆண்களை கொலை செய்து பெண்களையும் சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்து பாலியல் வல்லுறவு செய்தார்கள், விற்பனையும் செய்தார்கள். இவை அனைத்திற்கும் முன்னோடிகள் யார் என்பதை குர்ஆனில், ஹதீஸ்களில் இருந்து மட்டும் பார்ப்போம்.


அதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : பனூ குரைஸா கைதிகளில் ஒருவனாக நான் இருந்தேன். சஹாபாக்கள் (எமது ஆடைகளைக் களைந்து) சோதனை செய்தார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரும் பருவத்தை அடைந்திருக்காதவர்கள் கொலை செய்யப்படவில்லை, நான் அப்பொழுது பிறப்புறுப்பில் உரோமம் முளைக்கதவனாக இருந்தேன்.

அபூதாவூத் 4404
பாகம் 40 ஹதீஸ் எண் 54


நபியே, உமது இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கின்றேன், ஆகவே நீங்கள் மூமின்களை உறுதிப்படுத்துங்கள், காபிர்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள், அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்"
குரான் 8:12


அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய மர்மஸ்தானங்களை காத்துக் கொள்வார்கள், எனினும் தங்கள் மனைவிகளிடமும், வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைப் பெண்களிடமும் உடலுறவு கொள்வதில் அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
குரான் 26: 7 - 8


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 371


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள்.

கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள்.

புஹாரி 4200


3609. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "(பனூ) ஃபஸாரா" குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.


எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப்பயணத் தொலைவு இருந்தபோது,இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.


பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்;வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.

அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.

உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான "கஷ்உ" ஒன்று இருந்தது. ("கஷ்உ" என்பதற்கு "விரிப்பு" என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.

இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்க வில்லை" என்று கூறிவிட்டேன்.

பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)" என்று கூறினார்கள்.


நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை" என்று கூறினேன்.

2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.


நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.
பாகம் :2 பகுதி :34


அதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : குரைஸா யுத்தத்தின் பின்னர் நாம் முஹம்மது நபியின் முன் நிறுத்தப்பட்டோம். மர்ம உறுப்பில் ரோமம் முளைத்து இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், உரோமம் முளைக்காமல் இருந்தவர்கள் கொலை செய்யப்படாமல் விடப்பட்டார்கள், எனக்கு மர்ம உறுப்பில் உரோமம் முளைத்து இருக்காததால் நான் கொல்லப்படவில்லை.

திர்மிதி 1584
பாகம் 21 ஹதீஸ் எண் 46

இதே ஹதீஸ் அபூதாவுத் 4404 ஆவது ஹதீஸ் ஆகவும் இடம்பெற்றுள்ளது.


கஸீர் பின் அஸ்ஸாஇப் (ரலி) அறிவிக்கின்றார் :
குரைஸா கோத்திரத்தின் சிறுவர்கள் எனக்குக் கூறினார்கள் "நாம் முஹம்மது நபியின் முன்னால் நிறுத்தப்பட்டோம், எங்களில் யார் பருவமடைந்து பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், எங்களில் யார் பருவமடையாதவர்களாக பிறப்புறுப்பில் உரோமம் வளராதவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்படவில்லை."

நஸஈ 3429
பாகம் 27 ஹதீஸ் 41


இப்பொழுது சிந்தியுங்கள், முஹம்மது இறை தூதரா, இல்லை அந்தக் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோலனா? இவரை எப்படி இறைதூதர், எக்காலத்திற்கும் பொருத்தமானவர் என்று இன்றைக்கு பின்பற்ற முடியும்? முஹம்மது நபி எக்காலத்திற்கும் பொருத்தமான இறைதூதராக முன்னிறுத்தப்படும் வரை பக்தாதிகளின், ஐஎஸ்ஐஎஸ் களின் உருவாக்கத்தை தவிர்க்க முடியாது.